வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் டிசம்பர் மாதத்துக்குள் மீள கையளிக்கப்படும் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!
Wednesday, September 20th, 2023வடக்கு மாகாணத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மீள கையளிக்கப்படும் என வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் காணிகளை விடுவிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முடியும்.
குறித்த காணிகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் முழுமையாக கையளிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஊடாக மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படும் என வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஏனைய நாடுகளை விட மேல் கோட்டில் இலங்கை!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கம்!
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!
|
|