வடக்கில் கூட்டுறவு சங்கங்களின் நிறுவன செயற்பாடுகள் திருப்தியாக இல்லை – வடக்கின் ஆளுநர் குற்றச்சாட்டு!

Sunday, August 30th, 2020

வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை என வட மாகாண ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தே அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் விவசாய வங்கிகளே. இத்தாலி நாட்டிலுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் கூட்டுறவுத் துறையினரதே. அங்கிருக்கும் இறைச்சி, பற்பசை உட்பட அனைத்தும் கூட்டுறவுத்துறையின் தாயாரிப்புக்களாவே காணப்படுகின்றது.

எனவே, கூட்டுறவுத்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைகின்றது. ஆனால், நமது மாகாணத்தில் அத்துறையொரு தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணக் கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிறம் சாட்டியுள்ளார்.

இதன்போது கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் கேட்டறிந்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் – கூட்டுறவே நாட்டுயர்வு என்று கூறுவார்கள். அவ்வடிப்படையில் பார்த்தால் நமது மாகாணத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் வளர்ச்சியடையாமலும் சில சங்கங்கள் இயங்காமலும் உள்ளதாக எனக்களிக்கப்பட்ட அறிக்கையினூடாக அறிந்துகொண்டேன்.

அப்படிப் பார்க்கும்போது மாகாண அரசு எவ்வளவு முயன்றும் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. கூட்டு உறவாக இல்லாமல் தனிமனித சிந்தனையுள்ளவர்களாக நாமிருப்துதான் காரணமாக இருக்குமோவென நான் நினைக்கின்றேன்.

மக்களோடு இணைந்திருக்கும் ஒரு திணைக்களம் தான் இந்தக் கூட்டுறவுத் திணைக்களம். அதற்குப் பரந்த செயற்பாடுகளும் அதிகாரங்களும் இருக்கின்றன. அதனூடாகப் பல கடமைகள் இருக்கின்றன. நமது பொருளாதாரத்தையும் தமத வர்த்தக செயற்பாடுகளையும் வளர்த்தெடுப்பதற்கான கடப்பாடு கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு துறையின் செயற்பாடுகள் சீரான முன்னேற்றப் பாதையில் இல்லையென்பதே கவலையளிக்கின்ற விடயமாகவுள்ளது.

சீரழிந்துபோயிருக்கின்ற நமது மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் மக்களோடு மக்களாகவிருக்கும் கூட்டுறவுத்துறையின் செயற்பாட்டில் தான் உள்ளது. தனிமனித செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் தவிர்த்துப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களாக கூட்டுறவுத்துறையைச் சார்ந்தவர்கள் செயற்படவேண்டும் என்றுமு; அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு கிழக்கில் மேலும் 10000  பேருக்கு வீடுகள் அமைக்கப்படும் - மீள்குடியேற்ற அமைச்சின் சௌலாளர் சிவஞ...
அரசியல் உரிமைத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம் - சிவகுரு பாலகிருஷ்ணன்...
உணவு, வாழ்வாதார பாதுகாப்பிற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு - ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டம் அறிவிப்பு!