வடக்கில் காவற்றுறை ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்வதை கருத்தில் கொண்டு அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிவரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த 20 ஆம் திகதிமுதல் 23 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் அது நாளை காலை தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் எதிர்வரும் செவ்வாயக்கிழமை (24) காலை 6 மணிவரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் நிறைவு!
ஆசிய பிராந்திய பேரவை 300 மில்லியன் டொலர் நிதி உதவி!
வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது - பனங்கள்ளு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை !
|
|