வடக்கில் கடும் வறட்சி; அதிகமான மக்கள் பாதிப்பு!

Tuesday, May 1st, 2018

தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதும், 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான புத்தளம் மாவட்டத்தில் 68 ஆயிரத்து 648 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குருநாகல்மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 72 ஆயிரத்து 486 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 51 ஆயிரத்து 449 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் 35 ஆயிரத்து 112 பேரும், மன்னாரில் 1 லட்சத்து 2ஆயிரத்து 163 பேரும், முல்லைத்தீவில் 16 ஆயிரத்து 934 பேரும், வவுனியாவில் 17 ஆயிரத்து 926 பேரும், யாழ்ப்பாணத்தில் 79 ஆயிரத்து 314 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: