வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைகிறது!

Tuesday, December 25th, 2018

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது.

குறித்த வெள்ள அனர்த்தத்தினால் வடக்கில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச்சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 ஆயிரத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 708 பேர் தற்சமயம் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் என். வேதநாயகன் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட 85 பேரும் இடைத்தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் கூடுதலாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.

Related posts:

பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் மோசமான என்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு செல்ல நேரிடும் –...
பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடு - யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரை - அரசாங்கம் என்ற ரீதியில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ...