வடக்கில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் – கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவன் அறிவிப்பு!

Thursday, November 9th, 2023

எதிர்வரும் தை மாதம் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அண்மையில் நாங்கள் இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக கண்ணியல் பிரிவு போதனை வைத்தியசாலையில் கூடுதலான வெண்பிறை சத்துரை சிகிச்சைகள் குறுகிய காலத்துக்குள் செய்திருக்கின்றோம்.

உங்களுக்கு தெரியும் வடமாகணத்தை பொறுத்தவரையில் ஆளணி மிகவும் குறைவாக இருக்கின்றது, குறைந்த ஆளணி வளத்துடன் எங்களுக்கு இருக்கும் இடர்பாடுகளை சரியான முறையில் திட்டமிட்டு பல்வேறு தரப்பினரின் உதவியுடன் இதனை நாங்கள் நிறைவாக செய்திருக்கின்றோம்.

எங்களுடைய இந்த செயற்பாட்டுக்கு இரத்தினபுர வைத்தியசாலையின் கண் வைத்திய குழாம், கொத்தலாவல பல்கலைக்கழக வைத்திய குழாம், வவுனியா வைத்தியசாலையின் கண் வைத்திய பிரிவு கண் வைத்திய நிபுணர்கள் உதவியுடன் இந்த கண் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது.

அத்துடக்ன இந்த கண் சுகாதாரம் கண்பார்வை சிறப்பாக இருக்க வேண்டும் இது ஐக்கிய நாடுகள் சபையிலேயே 2021 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது, காலநிலை மாற்றமும் கண்ணும் என்கின்ற ஒரு கருத்து பொருள், மற்றது இந்த நிலையான அபிவிருத்தி திட்டம்.

இந்த வருடம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல் இந்த வருடத்தில் இருந்து இன்னும் மூன்று வருடங்கள் இலவசமாக 10 ஆயிரத்துக்கு மேல் செய்வதற்கு யோசனை செய்து இருக்கின்றோம்.

இந்த நடைமுறையின் மூலம் வடமாகணத்தில் இருக்கும் சகல மாவட்டங்களும் அந்தந்த கிராமிய வைத்தியசாலைகள் ஊடாக இதற்கான நபர்களை தெரிவு செய்கின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது, இதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை கால அவகாசமா அவகாசம் ஒரு வருடத்துக்குள் இதற்காக காத்திருப்பவர்கள் அனைவரையும் இல்லாது பண்ணி இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள கூடியதாக இருக்கும்.

ஆகவே நாங்கள் இந்த மூன்றாவது நிகழ்சித் திட்டமாக மந்த பார்வை அல்லது பார்வை இல்லாதவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: