வடக்கின் மீன்பிடித் தொழில் ஆபத்தில் – பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!
Tuesday, September 1st, 2020வடக்கில் மீன்பிடித் தொழில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளமை தொடர்பிலான மாதாந்த அறிக்கையை சமர்ப்பித்த பாதுகாப்பு அமைச்சு, வடக்கின் மீன்பிடிக் கைத்தொழில் தொடர்பில் தகவல்களை வெளியிட்டது.
அதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் 4,356 இந்திய மீனவப் படகுகள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளன. இதன்போது ஐவர் கைது செய்யப்பட்டுள்னர்.
2015 ஆம் ஆண்டில் இருந்து 71,609 இந்திய மீனவப் படகுகள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது 2,916 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
நாளை முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைக்குட்பட்டவர்களுக்கு உதவும் நடமாடும் சேவை !
யாழ். மாநகர சபையின் நிலையியல் குழுக்கள் நியமிக்கப்பட்டன!
ஊர்காவற்றுறையில் விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு...
|
|