வடக்கின் கல்வியை முன்னேற்ற நடவடிக்கை – பிரதமர்!
Monday, July 23rd, 2018வடக்கிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களை இணைத்துக் கொண்டு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் இது குறித்து வடமாகாண ஆளுநரிடமும் இராணுவத் தளபதியிடமும் தான் விசாரித்ததாகவும் அப்படியான ஒரு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர்கள் கூறியதாகவும் பிரதமர் கூறினார்.
வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
பணநோட்டுகளில் அர்ஜூனவின் கையொப்பம் செல்லுபடியாகுமா?
வேலணைப் பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு - தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!
வாகன சோதனைகள் மேலும் அதிகரிப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
|
|