வங்கிகளின் மூலதனத்தேவையை அதிகரிக்க மத்திய வங்கி முயற்சி!

Sunday, October 29th, 2017

நாட்டின் அனுமதிபெற்ற வங்கிகளின் குறைந்த மூலதன தேவைப்பாட்டை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கியின் உறுதிப்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேசத்தரமான Basel Three Frame ஐ செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனுமதி பெற்றவர்கள் உள்நாட்டு வர்த்தக வங்கியொன்றை ஆரம்பிப்பதற்கான குறைந்தபட்ச மூலதனமாக 20 பில்லியன் ரூபா அவசியம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்றவர்கள் உள்நாட்டு விசேட வங்கியொன்றை உருவாக்குவதற்கு 7.05 பில்லியன் ரூபா மூலதனத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

வெளிநாட்டிலுள்ள வங்கியொன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்சம் 10 பில்லியன் ரூபா மூலதனமாக இருத்தல் வேண்டும் எனவும் மத்திய வங்கி வெளிநாட்டிலுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள வங்கிகள் தொடர்பில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த ஆரம்ப மூலதன தேவைப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையிலுள்ள வங்கிக் கட்டமைப்புகள் அபாய நிலையை அடைந்துள்ளதாக சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் எனப்படும் Moody S அண்மையில் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Related posts: