லொத்தரில் பரிசு விழுந்ததாக வரும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் -இலங்கை மத்திய வங்கி!
Wednesday, March 1st, 2023உங்களுக்கு லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது வட்ஸ்அப் செய்தி வந்திருந்தால் அது நிச்சயமாக பொய்யும் மோசடியுமாகும் என இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
நீங்களும் இவ்வாறான மோசடிக்கு ஆளாகியிருந்தால் அல்லது அவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
பணம் வைப்பு செய்யப்பட்ட / வைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், சம்பந்தப்பட்ட வங்கி, கைத்தொலைபேசி எண் மற்றும் தொடர்புடைய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களுடன் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பதவிகளைக் கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!
ஒத்துழைப்பு வழங்கத் தயார் – ஐ.நாவின் 75 ஆவது வருட நிறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகள...
|
|