ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை!
Friday, March 4th, 2022ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப் பட்டுள்ளது.
இக்குழு சம்பவத்தை கண்காணித்து உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்தது.
இதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண் டோவுக்கு எந்தவிதமான செல்வாக்கும் இல்லை என்பதை அவதானித்ததாக குழு குறிப்பிட்டுள் ளது.
அனைத்து உண்மைகளையும் கருத்திற்கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என விடுவிக்கப் படுவார் என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அச்சுவேலி விவகாரம்: 14 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்!
இணைய வசதிமூலம் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு - வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற ...
|
|