ரயில் நிலையங்களில் டெங்கு பரவும் அபாயம் – போக்குவரத்துத் துறை அமைச்சர்!
Tuesday, June 27th, 2017
பெரும்பாலான ரயில் நிலையங்கள் அசுத்தமான நிலையில் இருப்பதாகவும் இவ்வாறான அசுத்தமான சுற்றுச் சூழல் காரணமாக டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் நிலைமை ஏற்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மருதானை ரயில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதேவேளை எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடங்களை சுத்தம் செய்யும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க ருவான் பத்திரண கருத்து தெரிவிக்கையில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோர...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
ஆதாரங்களுடன் ஊழல் மோசடிகள் தொடர்பாக அறிவித்தால் உடனடி நடவடிக்கை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!
|
|
|


