ரயில்வே பணிப்புறக்கணிப்பு : போக்குவரத்தில் இடையூறெனின் உடன் அழைக்கவும்!
Friday, August 10th, 2018ரயில்வே பணிப்புறக்கணிப்பை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை, பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது 500 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவை தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பாக 0117 505 555 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் துணைவேந்தர்களே பொறுப்பு..!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வேலணையில் காப்பெற் வீதிகளாகப் புனரமைக்கப்படும் வீதிகள்!
கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
|
|