யாழ் மாவட்டத்தில் கொரோனா அபாய நிலை நீங்கவில்லை!

Monday, April 26th, 2021

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அனர்த்த நிலமை ஏற்படாவிட்டாலும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என யாழ் மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் சுமார் 1200  போர்  சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தேசிய கொவிட் செயலணி தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில்  யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி திணைக்களங்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் பரப்புகின்ற கொரோனா வைரஸ் காற்று மூலம் அதிகளவில் பரவுவதாக சுகாதார தரப்பினர்கள் அச்சம் வெளியிடும் நிலையில் பொதுமக்கள்  தேவையற்ற போக்குவரத்துக்களை தவிர்ப்பது நல்லது.

ஆகவே பாடசாலைகள் அனைத்தும் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைவரும் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் எதிர்வரும் நாட்களில் கொவிட் காட்டுபாடு முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: