மும்மொழிகளை தவிர்து பிறமொழிகளுக்கு அனுமதிகிடையாது – பிரதமர் ரணில்!

Thursday, May 23rd, 2019

வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எல்லா வீதி பெயர்ப் பலகைகளும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் இருப்பைதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, உள்நாட்டு விவகார, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் வஜித அபேவர்த்தனவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மூன்று மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகள் பெயர்ப்பலகைகளில் இடம்பெறக் கூடாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts: