யாழ் மாநகர சபைக்கு மும்முனைப் போட்டி : அதிகாரத்தை கைப்பற்ற இரகசிய வாக்கெடுப்பு!
Monday, March 26th, 2018
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத காரணத்தால் யாழ் மாநகர சபையை நிர்வகிப்பது யார் என்ற பலப்பரீட்சையில் மும்முனைப் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.
முதல்வர் யார் என்பது தொடர்பான தெரிவு நிலையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு 25 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
குறித்த மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் ஆர்னோல்ட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் சட்டத்தரணி மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரபல சட்டத்தரணி ரெமீடியஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
Related posts:
எதிர்வரும் ஜீலை 6 முதல் தொழில்நுட்ப கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம் - தொழில் உறவுகள் அமைச்சு!
நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது - அமைச்சர் காமினி லொ...
நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதம்!
|
|