தெற்காசிய புலனாய்வு அமைப்புக்களின் மாநாடு இன்று ஆரம்பம்!

Thursday, September 22nd, 2016

தீவிரவாத முறியடிப்புக்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக தெற்காசிய நாடுகளின் புலனாய்வு அமைப்பின் தலைவர்களின் முக்கிய மாநாடு இன்று புதுடில்லியில் ஆரம்பமாகின்றது.

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் புலனாய்வு அமைப்பின் தலைவர்களே இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இருப்பினும், பாகிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பின் தலைவர் அப்டாப் சுல்தான் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார். இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலிருக்கும் முறுகல் நிலை காரணமாகவே பாகிஸ்தான் தனது புலனாய்வு அமைப்பின் தலைவரை இந்த மாநாட்டுக்கு அனுப்புவதில்லையென முடிவெடுத்துள்ளது.

தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது குறித்து சார்க் நாடுகளின் புலனாய்வுத் தலைவர்களுக்கிடையில் நடத்தப்படும் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்தியாவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐபியின் பணிப்பாளர் தினேஸ்வர் சர்மா இந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பார்.

தெற்காசியப் பிராந்தியத்தின் உறுதிப்பாடு, பாதுகாப்பு, பிராந்தியத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் கூடிய கவனம் செலுத்தப்படும்.

தற்போதுள்ள தீவிரவாத முறியடிப்பு பொறிமுறைகள், அவற்றின் குறைபாடுகள், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளையும் இந்த மாநாட்டில் புலனாய்வுத் துறைகளின் தலைவர்கள் ஆராயவுள்ளனர்.

saarc1

Related posts: