யாழ்.பிரதம தபாலகத்திற்கு புதிய வாகனம் விரைவில்!
Tuesday, December 20th, 2016
யாழ்.பிரதம தபாலகத்தின் தபால் சேவைக்காக மேலும் ஒரு வாகனம் இந்த வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. ஏற்கனவே தபாலகத்தில் உள்ள ஒரு வாகனம் மூலம் தபால் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
போதிய வாகன வசதி இன்மையால் தூர இடங்களுக்கான தபால் பொதிகள் யாவும் இ.போ.ச பேருந்துகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. தற்போது வந்து சேரவுள்ள வாகனத்தின் ஊடாக வலி.மேற்கு பகுதிகளுக்கான தபால்களை எடுத்து செல்லும் பணிகள் அரம்பிக்கப்படும். அதே சமயத் தீவுப் பகுதிக்கான தபால் பொதிகள் இ.போ.ச பேருந்து மூலமே எடுத்து செல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
வடக்கின் சுகாதார அமைச்சு பாராமுகம்: நெடுந்தீவு பிரதேச நோயாளர்கள் அவதி!
2018 வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆலோசனைகள் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்!
தவறுகளை மறைக்கவோ தப்பிக்கொள்ளவோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டுச் சேரவில்லை - ஈ.பி.டி.பி.
|
|
|


