யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது!
Thursday, September 14th, 2017
யாழ். பல்கலைக்கழகப் பெண் ஊழியரொருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ள நிலையில் குறித்த நிர்வாக அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கடந்த வெள்ளிக்கிழமை(07) பல்கலை க்கழக ஊழியர் சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகி ஷ்கரிப்புப் போராட்டம் இன்று பிற்பகல்-01.30 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று முற்பகல்-11.30 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொதுச் சபை பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதெனத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும்- 30 ஆம் திகதி இடம்பெறும் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தின் போது குறித்த பிரச்சினைக்குத் தீர்க்கமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் இல்லாவிடில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதெனவும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸ் பதவியில் நீண்டகாலமாக இருப்போருக்கு பதவி உயர்வு!
இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை - சீனா!
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜ...
|
|
|


