யாழ்.பலாலி இராணுவ முகாமில் வெடிவிபத்து? இராணுவச் சிப்பாய் பலி!

யாழ்.பலாலி இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக்குண்டுவெடிப்பில் ஒரு இராணுவச் சிப்பாய் பலியாகியுள்ளதுடன், 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இராணுவ முகாமுக்குள் இருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மறுபடியும் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டுக் குழு!
|
|