யாழ் தேவியை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா – பிரபா கணேசன் புகழாரம்!

Sunday, June 17th, 2018

யாழ் தேவியை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்வதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஜனாதிபதியின் விஷேட அபிவிருத்தி திட்ட அமைப்பாளருமான பிபாகணேசன் புகழாராம் சூட்டியுள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ் தேவி புகையிரதத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்லும் மிகப்பெரிய பணியை பல்வேறு இடர்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் முகங்கொடுத்து அதனை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து அதை செயற்படுத்திக் காட்டியவர் டக்ளஸ் தேவானந்தா.இதற்காக அவர் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் இடர்பாடுகளையும் நாம் நன்கறிவோம்.

அதுமாத்திரமன்று யாழ் குடாநாட்டுக்கு மட்டுமல்லாது வடபகுதியிலும் மக்களுக்கான அபிவிருத்திகள் பலவற்றை முன்னெடுத்து சாதித்துக்காட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும் சுட்டிக்காட்டிய பிரபாகணேசன்,

டக்ளஸ் தேவானந்தாவின் காலத்தில் அவரது தலைமை மற்றும் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி வேலைகளை இன்று நாம் நேரடியாக காணமுடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் அவரது காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப்போன்று எதிர்காலங்களில் வேறு யாரும் முன்னெடுப்பார்களா என்பது சந்தேகமே என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts: