யாழ்.குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றுக்கு நீதிபதி பிரேமசங்கர் நியமனம்!

Monday, July 12th, 2021

மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் இந்த நியமனத்தை இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சுமார் 10 மாதங்களின் பின்னர் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வை மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கம், தாவூத் லெப்பை அப்துல் மனாப் ஆகிய இருவரும் இன்று திங்கட்கிழமைமுதல் முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, 2018 மே 26 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: