மீன் விலைகள் திடீரென அதிகரிப்பு!
Tuesday, May 15th, 2018
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொழில்ப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அனைத்து இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீன்பிடித்துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளுக்கு அருகில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தின் காரணமாக பல மீன்களின் விலைகள்உயர்ந்துள்ளன.
ஒரு கிலோ 300-350 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்யப்பட்ட கெலவல்லா மீன், தற்போது 600 ரூபாவாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
எச்சரிக்கை! வாகனப்புகை மூளையை பாதிக்கும் !!
விலை குறைத்தும் விலை குறையாத மண்ணெண்ணை!
மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறு...
|
|
|


