யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் நாளை மறுதினமும் மின்தடை!

Friday, November 11th, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு  வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமையும்(12), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(13) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளைய தினம் அச்செழு, கோம்பையன் மணல் ஒரு பகுதி, காக்கை தீவு ஒருபகுதி, கொத்தியாவத்தை ஆகிய இடங்களிலும், நாளை மறுதினம் இணுவில், கொத்தியாவத்தை, மருதனார்மடம் ஒருபகுதி, உப்புமடம், தாவடி, சுதுமலை, கொக்குவில் சந்தி, ஆடியபாதம் வீதி, சம்பியன் லேன், பிரம்படி, மாவடி, யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடப் பிரதேசம், குளப்பிட்டி, ஆனைக் கோட்டை, வராகி அம்மன் கோவிலடி, சாவற்கட்டு, சென். பீற்றர்ஸ் நவாலி, அட்டகிரி, காக்கை தீவு, மூத்த விநாயகர் கோவிலடி, பூநாறி மரத்தடி, சிவப்பிரகாசம் வீதி, கோம்பையன் மணல் ஆகியவிடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1711153386Untitled-1

Related posts: