யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் கோர விபத்து – பாடசாலை மாணவி படுகாயம்!

Tuesday, November 23rd, 2021

யாழ்ப்பாணம் – கொக்குவில், தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவியையும் அவரது தந்தையையும் மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8Bல் கல்வி கற்கும் மாணவியும் அவரது தந்தையுமே இவ் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பேருந்து இலக்கத்தகடு அற்றதோடு பாவனைக்கு உதவாத பேருந்து என விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: