யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா – 15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Thursday, June 3rd, 2021யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்,ஒரு வயது, ஒன்றரை வயது மற்றும் 3 வயது பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 8, 9, 11, 14, 15 வயது சிறுவர்களுக்கும், 9, 10, 13, 14 சிறுமிகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படும் சந்தர்ப்பம் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
Related posts:
வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!
விசேட தேவையுடையோரும் தொழில்வாய்ப்புகளில் உள்ளீர்க்கப்பட வேண்டும் - ஜய்கா கோரிக்கை!
முடிவுக்கு வந்தது உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
|
|