யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Friday, June 4th, 2021“யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்.” என கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
“யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, ஜனாதிபதியின் பணிப்பில் 2 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
யாழ். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் யாழ். பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நாங்கள் மேலும் தடுப்பூசிகளை யாழ். மாவட்டத்துக்கு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்” – என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தியை தடுக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு - குற்றம் சுமத்துகிறார் ஈ.பி....
ஆரம்பிக்கிறது பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள்!
நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|