யாழ்ப்பாணத்தில் 69 ஆயிரம் பேருக்கு குடிநீர் இல்லை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தகவல்!

Friday, August 11th, 2023

யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு , ஊர்காவற்துறை , சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 21 ஆயிரத்து, 714 குடும்பங்களை சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் குடிநீர் இல்லாமல் அல்லல்பட்டு வரும் நிலையில் குறித்த பிரதேச செயலர்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதி மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் மழை பெய்யா விடின் நிலைமை மேலும் மோசமாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் கட்டுப்பாடு - பலதரப்பும் கடும் எதிர்ப்பு...
காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கிகள் - வீதி அபிவிருத்...
தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்றின் முடிவு வரும்வரை உள்ளூராட்சி சபை தேர்தல் ஆவணங்கள் எவையும் அச்ச...

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு – இதுவரை 210 போர் உறுதிப்படுத்தப்பட்டனர்!
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் கு...
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர்...