யாழ்ப்பாணத்தில் மேலும் 48 பேருக்குக் கொரோனா தொற்று – கொடிகாமத்தில் மட்டும் 24 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் 585 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேருக்கும் முல்லைத்தீவில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இருவருக்கும் வவுனியாவில் ஒன்பது பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 40 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 48 பேருக்குக்  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தொற்றுக் கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய இருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதுடன் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆறு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: