யாழ்ப்பாணத்தில் மாணவன் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!

Friday, June 1st, 2018

யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் மாயமாகியுள்ளதாக  யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் கற்கும் குறித்த மாணவன் கடந்த 29ஆம் திகதி மாலை யாழ்.சாவகச்சேரியிலுள்ள வீடொன்றுக்கு சைக்கிளில் விறகு கொண்டு சென்றுள்ளார். விறகினை கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்ப புறப்படும் போது இருள்சூழ தொடங்கி விட்டதால் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்.

அடுத்த நாள் அதிகாலை 5.30 மணியளவில் மாணவன் யாழிலுள்ள குறித்த வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக விசாரணைகளின் போது வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை மாணவன் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்காத நிலையில், பூநகரி மற்றும் யாழ். பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related posts:


வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையின்மை தீர்மானம்?-  வடமாகாண உள்ளூராட்சி மன...
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை -பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட!
சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் - கல்வி அமைச்சர...