யாழ்ப்பாணத்தில் மாணவன் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!
Friday, June 1st, 2018
யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் மாயமாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.
உயர்தரத்தில் கற்கும் குறித்த மாணவன் கடந்த 29ஆம் திகதி மாலை யாழ்.சாவகச்சேரியிலுள்ள வீடொன்றுக்கு சைக்கிளில் விறகு கொண்டு சென்றுள்ளார். விறகினை கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்ப புறப்படும் போது இருள்சூழ தொடங்கி விட்டதால் அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்.
அடுத்த நாள் அதிகாலை 5.30 மணியளவில் மாணவன் யாழிலுள்ள குறித்த வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக விசாரணைகளின் போது வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை மாணவன் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்காத நிலையில், பூநகரி மற்றும் யாழ். பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Related posts:
இன்று உலக தபால் தின நிகழ்வுகள்!
தொற்றா நோய்களினாலேயே இலங்கையில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன - வெளியான திடுக்கிடும் தகவல்!
அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் சமுகமளிக்காமை தொடர்பில் அரசாங்க நிதி ப...
|
|
|
பாதீட்டினூடாக அரச ஊழியர்களது ஊதிய விவகாரத்திற்கு தீர்வு - நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அ...
காதலர் தினத்தில் விழிப்புடன் இருக்கும் காவல்துறையினர் - விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு என காவல்த...
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - அடையாள அணிவகுப்பில் - 4 பொலிஸாரை அடையாளம் காட்டினார் பிரதான சாட்சி!


