யாழ்ப்பாணத்தில் அனைத்து வியாபார நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறந்திருக்க ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு!

Sunday, August 16th, 2020

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆடையகங்கள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணிவரை திறந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் சார்லஸ், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து ஊழியர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களை திறந்து வைத்திருப்பதன் மூலம், வட மாகாணத்தின் இயல்புநிலை பராமரிக்கப்பட்டு வருவதனை தெளிவுப்படுத்துவதற்கும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மகேசன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்து சேவைக்கும் பயணிகளின் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தற்போது அதிகமான பேருந்து சேவைகள் இரவு 8 மணியளவில் நிறுத்தப்படும் நிலைமையில், இரவு நேரத்தில் சேவையை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அமெரிக்க உதவி திட்ட உடன்படிக்கை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
மரண விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் வேண்டும் - திடீர் மரண விசாரணையாளர் தொடர...
போலியான கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்க வேண்டாம் - எதிர்க்கட்சிகளிடம் அமைச்சருமா...