யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை- தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Monday, January 16th, 2023

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் 255 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை செய்கிறது வடக்கு மாகாணசபை - ஈ.பி.டி.பியின் வடக்க...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் - இரண்டு வெளிநாட்டு இராஜதந்திர...
அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ந...