யாழில் 200 மில்லியன் நிதியில் உப்பு உற்பத்தி!
Tuesday, April 9th, 2019
யாழ்ப்பாணத்தில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, உப்பு உற்பத்தி நீரேற்றி வைக்கப்பட்டது.
தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் இந்த உப்பள உற்பத்தி நிறுவனத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக 100 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருட யுத்தத்தின் போது வடமாகணத்தில் காணப்பட்ட தொழிற்சாலைகள் அழிவடைந்த பின்னர் இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் காணப்படுகின்றார்கள்.
இவ்வாறான நிலையில், வடமாகாணத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அண்மையில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் சரிபார்க்கும் பாடசாலைகள்!
எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே நோக்கம் - அடுத்த ஆ...
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...
|
|
|


