யாழில் புகையிரதத்துடன் மோதுண்டவர் உடல் சிதறிப் பலி!

Monday, March 19th, 2018

யாழ்ப்பாணம் ௲ அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் இன்று(19) அதிகாலை 5.30 மணியளவில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதியே இவர் உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: