யாழில் கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

Friday, April 22nd, 2022

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – மிருசுவில் வைத்தியசாலைக்கு அருகில் தொடருந்துடன் மோதி கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளனாதிலேயே இம் மூவரும் உயிரிழந்துள்ளனர்

விபத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்ளே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: