யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி ஆரோக்கியமாக உள்ளார் – யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!
Wednesday, March 25th, 2020யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுடையவரின் உடல் ஆரோக்கியம் சாதாரணமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இலங்கையிலும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்திலும், இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அவர் தற்போது சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவரின் தற்போதைய நிலை குறித்து யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
ஜனவரியில் பாரிய அரசியல் மாற்றம்? - முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம!
புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும...
அரசியல் கூட்டங்களால் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது - பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!
|
|