மோட்டார் சைக்கிளுக்கு 2,500 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் – வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடைமுறை துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, May 24th, 2022

வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடைமுறை இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தொடரும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்சம் 2,500 ரூபாய்க்கும் முச்சக்கர வண்டி 3,000 ரூபாய்க்கும் கார், வான்கள் மற்றும் எஸ்யூவிகள் 10,000 ரூபாய்க்கும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: