மோசடிகள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள் !
Friday, April 3rd, 2020கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதி என்ற பெயரில் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்று்ளளன.
இது போன்ற மோசடியான திட்டங்களுக்கு மக்கள் காசோலை மூலமாகவோ அல்லது வேறு மூலமாகவோ பணம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற மோசடிகள் தொடர்பில் அறிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 235 44 79 மற்றும் 011 235 43 54 ஆகிய இலக்கங்களுக்கு அலைப்பினை ஏற்ப்படுத்தி அறிந்துகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியாவின் 70ஆவது சுதந்திரதினம் யாழ்ப்பாணத்தில்!
இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உப...
யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம்!
|
|