மே11 முதல் மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் ஆரம்பம் – ரயில்வே திணைக்களம் !

Wednesday, May 6th, 2020

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் எதிர்வரும் மே11 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை அலுவலகப் பணியாளர்கள் கொழும்புக்கு வருகை தருவதற்கு வசதியாக இந்த தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அம்புக்குறிகளால் அடையாளமிடப்பட்ட ஆசன ஒழுங்கில் மட்டுமே பயணம் செய்வோர் அமர அனுமதிக்கப்படுவர் என்றும், ஆசன முற்பதிவுகளை திணைக்கள அல்லது நிறுவனத் தலைவர்கள் ஊடக மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுள்ளது.

அதன்போது பயணத்தை மேற்கொள்ள உள்ளவரின் அலைபேசி இலக்கத்தை குறிப்பிடவேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரயில்வே திணைக்களம் அந்த இலக்கத்துக்கு வரும் குறுந்தகவலை (எஸ்.எம்.எஸ்) காண்பித்து ஆசனங்களில் அமர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பயணம் செய்பவர்கள் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவதையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

Related posts: