தனியார் நிறுவனங்கள் தாம் நினைத்தவாறு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்ககொள்ள முடியாது – இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Thursday, June 3rd, 2021

இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இலங்கையில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் உண்டு என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தனியார் நிறுவனங்களுக்கு தாம் நினைத்தவாறு இதனை பெற்றுக்ககொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்தவொரு நாடும் இவ்வாறான தடுப்பூசி அல்லது மருந்துவகைகளை விநியோகிப்பது அந்தந்த நாடுகளிலுள்ள அரச நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதியளித்துவருகின்றது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அதேநேரம் சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றிக் கொண்டவர்களுக்கு அதன் இரண்டாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற தடுப்பூசி ஏற்றும் பணியில் இன்றும் நாளையும் என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2020 அண்டின் நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 வயதிற்கு மேற்பட்டோர் 145 இலட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு கொவிட் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மேற்கொண்டிருந்ததாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர்  ஐந்து இலட்சம் கொவிட் ஷீல்ட் தடுப்பூசிகள் கடந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டிற்குக் கிடைத்தது என்றும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானதாகவும் கூறினார்.

இதேநேரம் 13 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள் இராஜாங்க அமைச்சர் அவற்றில் ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கவுள்ளது என்றும் மிகுதி ஐந்து மில்லியன் தடுப்பூசிகளும் எதிர்வரும் புதன்கிழமை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: