மே தினத்தின் பின் அமைச்சரவையில்  மாற்றம்- ஜனாதிபதி

Saturday, April 30th, 2016

மே தினக் கூட்டத்தின் பின்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்..

முக்கியமான அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் பதவியிலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காலி கோட்டையில் நேற்று (29)நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சிமன்ற மாகாணசபை பிரதிநிதிகள், கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்த அமைச்சர் பற்றி அறியக் கிடைத்தது என ஜனாதிபதி கூறியுள்ளார். அமைச்சர் சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர்களான நிசாந்த முத்துஹெட்டிகம, மனுச நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்தன, பியசேன கமகே, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் டி சில்வா உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: