மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Saturday, May 1st, 2021கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒருவார காலத்தக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஒருவார காலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சுகாதார நிலைமைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில், அடுத்தவாரம் 3 ஆம் திகதிமுதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளை நடத்துவது உசிதமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக, எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுகர்வோர் நலனுக்காக தொலைபேசி இலக்கங்கள்!
5 வீதம் மின் கட்டணங்கள் அதிகரிக்குமா?
கைகளால் தொட்டு உணவுப் பொருட்களை விற்கத் தடை!
|
|