மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை!

Thursday, June 8th, 2017

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

2016 – 2017 ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கான Z புள்ளிகள் நேற்று (06) வெளியாகியிருந்தன.இதன்பிரகாரம் 14 பல்கலைக்கழகங்கள் மற்றும் வவுனியா,திருகோணமலை ஹொரணை, உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு, மேலதிக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன்பிரகாரம் 29,696 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பமாகவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார குறிப்பிட்டுள்ளார்.

Related posts: