மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை – அரசாங்கம்!
Tuesday, March 17th, 2020
இன்றுமுதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் வேலைதிட்டத்திட்டத்திற்கு அமைய இந்த விடுமுறையை நீடிப்பதற்கு அல்லது நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related posts:
யாழ். மாணவருக்கு 'மாவா' என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகம்!
விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொது மக்களுக்கு பொ...
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 2 இலட்சத்து 28,611 விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா உரம் - சாவ...
|
|
|


