மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானம்!
Saturday, April 3rd, 2021
தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக சபையின் அவசர மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நீர் மின்னுற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் காலப்பகுதியில் இந்த மின் நிலையங்களினூடாக நாளாந்தம் 170 மெகா வாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, குறித்த 3 தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை மாற்றும் கேவலமான அரசியலை எப்போதும் நாம் மேற்கொண்டது கிடையாது – ஈ.பி.டி...
காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் – பொதுமக்களிடம் சுகாதார...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - பயனாளிகளுக்கு இதுவரை 5 ஆயிரத்து 196 கோடி 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ள...
|
|
|
தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க இந்தியா...
இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து - இந்திய வெளிவிவகார அமைச்சர் தெர...
இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு அதிகரிக்கப்பட்ட வரிச்சலுகை நிவாரணம் - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை...


