முழுமையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படவில்லை – ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ!

Wednesday, July 5th, 2017

இலங்கை இன்னமும் முழுமையான நல்லிணக்கத்தை அடையவில்லை என்று கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகி – இலங்கை அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளவரான ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இலங்கை அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளார். தாம் ஜனாதிபதியின் செயலராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியான பின்னர் சமூக ஊடகங்களில் என்னைத் தாக்கி பதிவுகள் வெளியாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் புதிய பதவியின் பெறுபேறாக ஊடகங்களில் தாம் முகம் கொடுக்க நேரிடக்கூடிய குற்றச்சாட்டுக்களுக்கு தயாராகுமாறு  தமது குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: