முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு!
Tuesday, March 23rd, 2021சர்வதேச வளிமண்டலவியல் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு கரையோர வீதியில் இந்த அலுவலகம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், முல்லைத்தீவு இராணுவ படைத்தளபதி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க மற்றும் வானிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச வளிமண்டலவியல் தினத்திற்கான நிகழ்வும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அடுத்த ஆண்டு முற்பகுதியில் சீனா , சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை - பிரதமர் ரணில்!
கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை – யாழில் சம்பவம்!
எரிவாயு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - அகில இலங்கை சிற்றுண்டிச்ச...
|
|