முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் இம் மாதத்திற்குள் பூர்த்தி!
Monday, February 13th, 2017தேசிய பாடசாலைகளில் முதலாமாண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை இம் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப் பட்டுள்ளதாக கல்வியமைச்சின் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜே.அயிலபெரும தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தகவல் தருகையில் :20 தேசிய பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை இம் மாதத்திற்குள்
பூர்த்தி செய்ய எதிர்பாத்திருப்பதாக தெரிவித்தார்.
கொழும்ப றோயல் கல்லூரி, காலி, மாத்தறை, கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில பிரபல பாடசாலைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ன.
தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இதுவிடயம் குறித்து பல்வேறு முறைப்பாடுகளை கல்வியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவர்களை முதலாமாண்டுக்கு இணைத்துக் கொள்ளும் போது, பல குறைபாடுகள் காணப்பட்டதாகவும் இந்த முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகலும் கல்வியமைச்சின் தேசிய பாடசாலை விவகார பணிப்பாளர் பி.எம்.ஜே.அயிலபெரும குறிப்பிட்டார்.
Related posts:
|
|