முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வியலுக்கு ஒளியேற்றிக் கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் ஐங்கரன்!
Saturday, July 30th, 2016எமது சிறார்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் முன்பள்ளி ஆசிரியா்களின் சேவையினைக் கருத்திற்கொண்டு அவா்களுக்கு ஒருதொகை ஊக்குவிப்புக் கொடுப்பனவு வளங்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளா் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவா்களுள் எடுத்த முயற்சியின் பயனாகத்தான் இன்று ஒரு தொகை ஊதியத்துடன் கௌரவமான சேவையை எமது முன்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளமுடிகின்றது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
அச்செழு ஒளிநிலா முன்பள்ளி மாணவா்களின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு நேற்றுமுன்தினம் (28) சனசமூக நிலையத் தலைவா் ஜெகன்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவா் மேலும் உரையாற்றுகையில் –
இளம் சிறார்களின் எதிர்காலத்திற்கு அத்திவாரமிடம் முன்பள்ளி ஆசிரியா்களிற்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை. ஆனால் இது தொடர்பில் இன்று மத்தியிலும், மாகாணத்திலும் ஆட்சியில் இருப்பவா்கள் எந்தவொரு செயற்றிட்டத்தையும் மன்னிறுத்தி அவர்களது வாழ்வியலுக்கான ஒரு திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதே வேதனையான விடயமாகும். அத்துடன் நவீன வசதிகள் கொண்ட முன்பள்ளிகளை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறார்களது திறமைகள் மேம்படுத்தப்பட வழிவகை உருவாக்கப்படவேண்டும்.
பொய்தனமான வார்த்தைகளை உணர்ச்சிபொங்க பேசி மக்களிடம் சென்று தங்களுடைய சுயலாப அரசியலுக்காக வாக்குகளை அள்ளிச் சென்ற தமிழ்தேசியக் கூட்டமைபிபினர் இன்றைய ஆட்சியில் மத்திய அரசுடன் பங்காளிகளாக இருந்துகொண்டு தமது தேவைகளை மட்டும்தான் பூர்த்திசெய்துகொண்டிருக்கின்றனரே தவிர மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதனை எமது மக்கள் உணர்ந்து வருங்காலத்தில் ஒரு மாற்றத்தை உரவாக்க முயற்சிக்கவேண்டும்.
இம்மாற்றத்திற்காக உண்மையாக மக்கள் மீது அக்கறையுடன் செயற்பட்டு மக்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தருபவா்களிற்கு உங்களுடைய வாக்குக்களை வழங்கி அவா்களை வெற்றிபெறச் செய்வதன் ஊடாகவே உங்களிற்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த முன்பள்ளிக்கு, எமது செயலாளா் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவா்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி, விசேட நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தில் இருந்து சுற்றுமதில் அமைத்துக் கொடுத்ததுடன், பாண்ட் வாத்திய இசைக்கருவியும் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டதுடன், இவ்வருடமும் இம்முன்பள்ளிக்கு, மின் இணைப்பு வசதி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவா்களது அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக J/279 அச்செழு கிராம உத்தியோகத்தர் எஸ்.சண்முகவடிவேல், J/279 அச்செழு வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் எஸ்.ஜெயசிங்கம், இடைக்காடு மகாவித்தியாலய ஆசிரியர் எஸ்.ரங்கநாதன், கௌரவ விருந்தினர்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக உப செயலாளர் கதிர்காமு சந்திரபோஸ் தென்.கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி.ரி.கனிதா, ஆகியோர் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|